அன்புதான் அரிந்ததா?

கனிந்த கண்மலர் நாணி நடுங்க
சிவந்த செங்கைகள் கண்களைக் கவர
நிலவின் நிழலில் குளிர்ந்த காற்றில்
தனித்து தவிக்கும் கண்ணே கரும்பே.
உனக்கு உயிர் தந்த தாயுமொருவள்
உண்டோ உருகமுதே? – கண்மை கரையுதடி !
மையிட்டு மெருகேற்றியிருக்கிறாள், பொட்டிட்டு பொலிவூட்டியுள்ளாள்
கண்டும் காணாமல் இருந்திடவா இவள்
தொப்புள்கோடி தொலைத்தாள், பத்துமாதம் பயந்தாள்?
வறுமைதான் வளர்ந்ததா? அன்புதான் அரிந்ததா?

அனாதைக் குழந்தை பற்றி இதை விட சிறப்பாக யாரும் எழுதியதில்லை.ஒருவள் என்பது தமிழ் இலக்கணம் ஒப்புக்கொள்ளாத சொல். ஒருத்தி என்பதே சரி.
http://kgjawarlal.wordpress.com
kgjawarlal@yahoo.com
கருத்துக்கு நன்றி. மனுஷி, மனிதம் வரிசையில், யாம் கண்டுபிடித்த ஒரு வார்த்தை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இக்கருத்தை மனதில் இருத்திவிட்டோம், நன்றிகள்.